ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகரான சுதீப், ராஜமவுலி இயக்கிய நான்ஈ படம் மூலம் தமிழ் நாட்டு ரசிகர்களுக்கும் பரிட்சயமாகி விட்டார். அதன்பிறகு ஒரு தமிழ்ப்படத்தின் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுதீப், தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.
அந்த நேரம்தான், ரஜினியன் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை உடனடியாக மறுத்தார் ரவிக்குமார். நான் ரஜினி படத்தை இயக்கவில்லை. கன்னடத்தில் நான் ஈ சுதீப்பை வைத்துதான் ஒரு படம் இயக்குகிறேன் என்று தெரிவித்தார். ஆனால், அப்போதுதான் அவர் சுதீப்பை சந்தித்து, ரஜினி பட விசயமாக பேசியிருக்கிறார். அந்த விசயம் சுதீப் மூலமாக கன்னடத்தில் பரவிய செய்தி, கோலிவுட்டுக்கும் வந்து விட்டது.
அப்போது அந்த செய்தியை மறைக்கத்தான், சுதீப்பை தான் சந்திக்க சென்றதை ஒப்புக்கொண்ட கே.எஸ்.ரவிக்குமார், அடுத்து தான் கன்னடத்தில் சுதீப்பை வைத்து ஒரு படம் இயக்குவதாக ஒரு மேடையில் தெரிவித்து மீடியாக்களை திசை திருப்பி விட்டார்.
ஆனால், அப்போது வெளியான செய்தி போலவே இப்போது ரஜினியின் புதிய படமான லிங்காவை கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குகிறார். அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சுதீப்பும் நடிக்கிறார். அது வில்லனா இல்லை மாறுபட்ட கேரக்ட்ரா என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மே2-ந்தேதி பெங்களூரில் நடைபெறும் லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் சுதீப்பும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.