ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தேவயானியின் கணவர் ராஜகுமாரன் இயக்கிய, 'நீ வருவாய் என' படத்தில் பார்த்துபார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாய் என என்ற பாடல்மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் பா.விஜய். அதையடுத்து ஏராளமான ஹிட் பாடல்களை எழுதிய அவர், ஆட்டோகிராப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்று மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஒரு பாடலை எழுதி, இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும் பெற்றார்.
ஆனால், அதன்பிறகு அவருக்கு நடிப்பின் மீது திடீரென்று ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் ஞாபகங்கள், இளைஞன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. இருப்பினும் நடிப்பின் மீதான அவருக்கான தாகம் அடங்கவில்லை. சினிமாவில் பாடல் எழுதுவது குறைந்தபோதும் மீண்டும் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார்.
அந்த வகையில், தற்போது 30 ரூபாய்க்கு ஒரு சிடி என்றொரு படத்தில் நடித்துள்ளார் பா.விஜய். இதற்கு முந்தைய படங்களில இருந்து இந்த படத்தை பக்கா கமர்சியல் கதையில் எடுத்திருக்கிறார்களாம். அதனால், இந்த படத்திற்கு பிறகு இதுவரை நடிப்பில் நான் எட்டிப்பிடிக்காத வெற்றியை கண்டிப்பாக பிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கும் அவர், இதில் காமெடி, ரொமான்ஸ், ஆக்சன் என கலந்துகட்டி அடித்திருக்கிறாராம்.