ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நார்வே தலைநகர் ஓலோவில் 5வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடந்தது. இதில் பரதேசி படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தது. சிறந்த இயக்குனர் பாலா, சிறந்த நடிகர் அதர்வா, சிறந்த ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோர் விருதுகளை நேரில் பெற்றுக் கொண்டனர். இதுதவிர சிறந்த நடிகையாக பூஜா (விடியும் முன்), சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் (கடல்), சிறந்த காமடியன் சூரி, சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார், மனோராமா வாழ்நாள் சாதனையாளர் என பல விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொள்ள யாரும் செல்லவில்லை.
நார்வேயில் கடந்த 5 ஆண்டுகளாக வசீகரன் சிவலிங்கம் என்பவர் இந்த விழாவை நடத்தி வருகிறார். இங்கிருந்து அழைத்துச் செல்லப்படும் சினிமா கலைஞர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக சில முறைகேடுகள் நடந்ததாகவும், கடந்த ஆண்டு நார்வே சென்ற கலைஞர்கள் முறையாக உபசரிக்கப்படவில்லை என்பதாலும் நார்வே திரைப்பட விழாவில் தமிழ்நாட்டு கலைஞர்கள் அதிக அக்கறை காட்டவில்லை என்றாலும் வசீகரன் சிவலிங்கம் பரதேசி படக் குழுவை மட்டும் அழைத்து அவர்களுக்கு விருது வழங்கி இந்த ஆண்டு திரைப்பட விழாவை நடத்தி முடித்து விட்டார்.