ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சமீபகாலமாக பிரகாஷ்ராஜை புக் பண்ணிய எந்த படப்பிடிப்பு தளங்களுக்கும் அவர் உரிய நேரத்தில் செல்வதில்லை என்றொரு குற்றச்சாட்டு திரையுலகில் இருந்து வருகிறது. அதோடு, நடித்துக்கொடுத்த பிறகு டப்பிங் பேச வைப்பதற்குள் இயக்குனர்களும், படாதிபதிகளும் படும்பாடு அதைவிட அதிகம். அந்த வகையில், ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் பட யூனிட்டை கடுமையாக அலைக்கழித்த பிறகே டப்பிங் பேசிக்கொடுத்திருக்கிறார். அதனால்தான் இப்போது அவருக்கு அதிகமான படங்கள் இல்லை.
இருப்பினும், தெலுங்கில் அவ்வப்போது வில்லன் அரிதாரம் பூசிக்கொண்டு வருகிறார். அந்த வகையில், தெலுங்கில் சமீபத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஆகடு என்ற படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார் பிரகாஷ்ராஜ். ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய அன்றே அவருக்கும் இயக்குனர் சீனு வைட்லா என்பவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம்.
அதையடுத்து, டைரக்டருக்கு ஆதரவாக ஒரு உதவி இயக்குனர் பிரகாஷ்ராஜிடத்தில் வாக்குவாதம் செய்தாராம். இதனால் கோபமடைந்த பிரகாஷ்ராஜ் அவரை கெட்ட வார்த்தைகளால் கடுமையாக திட்டி விட்டாராம். இதனால் பிரகாஷ்ராஜை உடனடியாக படத்தில் இருந்து நீக்கி விட்டு வேறு வில்லனை புக் பண்ணி விட்டாராம் இயக்குனர்.
இதையடுத்து பிரகாஷ்ராஜ் மீது ஆந்திர நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விசாரித்தவர்கள், பிரகாஷ்ராஜ் மீது தவறு இருப்பதாக சொல்லி அவர் ஒரு வருடம் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு தடை விதித்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
என் தரப்பில் இதுபற்றி எந்த கருத்தும் கேட்காமல், யூனிட்டில் உள்ளவர்களின் வார்த்தைகளை வைத்து எனக்கு தடை விதிப்பது நியாயமில்லை நான் 20 ஆண்டுகால நடிகன். அதனால் எனக்கெல்லாம் இந்த மாதிரி தடை விதிக்கக்கூடாது என்று தனது சார்பில் கூறி வருபவர், விரைவில், ஆந்திர நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யும் முயற்சியில் இறங்கப்போகிறாராம்.