ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரவான் படத்துக்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத் தலைவன். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். பெரும் பொருட் செலவில் தயாராகும் பீரியட் பிலிம். அந்தக் காலத்தில் நாடகம் போட்டு பிழைக்கும் குழுவின் வாழ்க்கையையும், காதலையும் சொல்கிற படம். கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் காதல் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சிதான் பாக்கி இருக்கிறதாம். அதுதான் படத்தின் முக்கிய பாடல் காட்சியாம். தற்போது ஹாலிவுட் படத்தில் பிசியாக இருக்கும் ரஹ்மான் அந்த பாடலுக்கான மெட்டை கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம். ரஹ்மான் மெட்டு கொடுத்ததும் அதற்கு நா.முத்துகுமார் பாடல் எழுதி அதன் பிறகு செட் போட்டு பாடலை எடுக்க வேண்டுமாம். இதற்காக ரஹ்மான் எப்போது வருவார். மெட்டை எப்போது தருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்திற்கு ஒப்புக்கொள்ளும்போதே ஏ.ஆர்.ரஹ்மான் "எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நான் தரும்போதுதான் நீங்கள் மெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். எனக்காக காத்திருக்க வேண்டியது வந்தால் என்னை குறை சொல்லக்கூடாது" என்று நிபந்தனை விதித்துதான் ஒப்புக் கொண்டாராம். அதனால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறார் வசந்தபாலன். கிடைத்திருக்கும் இடைவெளியில் படத்தின் மற்ற பணிகளை ஆரம்பித்து விட்டார்.