ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2005ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த அனுஷ்கா, அதையடுத்து 2009ல் நடித்த படம்தான் அருந்ததி. அந்த வகையில் அவரது 15வது படம்தான் அவரை இந்தியா முழுக்க பேச வைத்தது. அவர் கொடுத்த அதிரடி நடிப்பைப்பார்த்து ஆக்ஷன் ஹீரோக்களே மிரண்டு நின்றார்கள். அந்த அளவுக்கு முகத்தில் ஆவேசத்தை வெளிப்படுத்தி மிரட்டலாக நடித்திருந்தார் அனுஷ்கா.
ஆனால் அதன்பிறகு அவரது திறமைக்கு தீனி போடக்கூடிய சரியான வேடங்கள் அவருக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் வழக்கமான நடிகைகளைப்போன்று சில ஆண்டுகளாக காதல், ரொமான்ஸ் என்று செய்து கொண்டிருந்த அனுஷ்காவுக்கு 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அமைந்திருக்கும் படம்தான் ராணி ருத்ரம்மா தேவி.
இந்த படத்துக்காக 6 மாதங்கள் மொத்த கால்சீட்டாக கொடுத்து ராணி ருத்ரம்மா தேவியையே கண்முன் கொண்டு வந்து நிறுத்திய அனுஷ்கா அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். பெரும்பாலும் ஹோட்டல் அறைகளுக்கே செல்லாமல் படப்பிடிப்பு தளமே கதியென்று கிடந்திருக்கிறார். கேரக்டர் மீது அவர் கொண்டு ஈடுபாட்டை பார்த்து, வழக்கமாக சினிமாவில் கவரிங் நகைகளை அணிவித்து படமாக்குபவர்கள், இந்த படத்துக்காக நிஜ தங்கத்தில் செய்த நகைகளை அனுஷ்காவுக்கு அணிவித்தே படமாக்கியிருக்கிறார்கள்.
இதுபற்றி அனுஷ்கா கூறுகையில், 5 கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கப்பட்டு என்னை அலங்கரித்து படமாக்கினார்கள். அதுவே எனக்கு பெரிய சந்தோசம். இந்த பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை என்று சொல்லும அனுஷ்கா, இந்த படம் எனது கேரியரில் எப்படி அருந்ததி ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்ததோ, அதற்கு இணையான இன்னொரு திருப்புமுனை படமாக இருக்கும். அதனால், இதுவரை எந்த படத்திற்கும் கொடுத்திராத நூறு சதவிகித நடிப்பை இந்த படத்துக்காக கொடுத்திருக்கிறேன். இனி ஆந்திரா மக்களுக்கு ராணி ருத்ரம்மா தேவி என்றாலே நான்தான் ஞாபகத்துக்கு வருவேன். அந்த வகையில் அந்த சினிமா வரலாற்றில் என் பெயர் ஆழப்பதிந்து விடும் என்று தனது சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறார் அனுஷ்கா.