பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமீபகாலமாக அவுட்டோர் படப்பிடிப்பு என்றாலே ஏதேனும் ரூபத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது. குறிப்பாக நடிகர்-நடிகைகள் தங்களை சூழ்ந்து கொள்ளும் ரசிகர்களால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த விசயத்தில் ஹன்சிகாவுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் எற்படுகிறது. அவர் ஷாட்டை முடித்து விட்டு கேரவனுக்குள் புகுந்து கொண்டால் அவர் எப்போது வெளியே வருவார் என்று ஒரு கூட்டமே கேரவனை சூழ்ந்திருக்கிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை தனது கொழுக் மொழுக் கவர்ச்சியால் கவர்ந்து வைத்திருக்கிறார் ஹன்சிகா.
இந்த நிலையில், சமீபத்தில் ஜெயப்பிரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடிக்கும் உயிரின் உயிரே படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கோவாவில் நடைபெற்றுள்ளது. அப்போது சித்து-ஹன்சிகா சம்பந்தப்பட்ட கிளுகிளுப்பாக காட்சிகளை கோவா கடற்கரையில் படமாக்கியிருக்கிறார்கள். இருவரும் கடற்கரை மணலிலும், கடல் நீருக்குள்ளும் விழுந்து புரண்டு காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியபடி ஆடிப்பாடியிருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் கட்டிப்புரண்டு ஆடிய அந்த ரொமாண்டிக் நடிப்பு அவர்களை சுற்றி நின்று வேடிக்கைப்பார்த்த சில ரசிகர்களை உசுப்பேற்றி விட்டதாம். விளைவு, மதிய இடைவேளைக்காக ஹன்சிகா கேரவனை நெருங்கும்போது சில ரசிகர்கள் அவரிடம ஆட்டோகிராப் வேண்டும் என்று முட்டி மோதினார்களாம். அதையடுதது, ஆட்டோகிராப் கொடுத்து விட்டால் அவர்களின் பிரச்னை தீர்ந்து விடும் என்று அவர்களை நெருங்கியிருக்கிறார் ஹன்சிகா.
அதையடுத்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு பெரும் கும்பலே அவர் மீது பாய்ந்து விட்டார்களாம். இதனால் அவர்களுக்கிடையே சிக்கிக்கொண்ட ஹன்சிகாவை, யாரோ ரசிகர் அந்த கூட்ட கலவரத்தை பயன்படுத்தி ஹன்சிகாவின் இடுப்பை பிடித்து கிள்ளி விட்டாராம். இதனால் வலி தாங்க முடியாமல் ஹன்சிகா அலற, யூனிட் நபர்கள் ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர். அந்த ரசிகரின் செயல் வெறித்தனமாக இருந்ததால், அதன்பிறகு தன்னால் நடிக்க முடியாது என்று கேரவனுக்குள் சென்று சுருண்டு கொண்டாராம் ஹன்சிகா.
அந்த சம்பவத்தையடுத்து இப்போதெல்லாம் அவுட்டோர் படப்பிடிப்பு என்றாலே ஹன்சிகாவின் உடம்பு பதறுகிறதாம்.