ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. அந்த படத்தின் ரீமேக் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழிலும் உருவாகியுளளது. இந்த இரண்டு பதிப்பிலுமே நயன்தாராதான் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது படத்தின் இயக்குனர் மட்டுமே கலந்து கொண்டார். நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், நயன்தாரா திறமையான நடிகை. அவரது நடிப்பைப்பார்த்து அவர் கேட்டதைவிட அதிக சம்பளம் கொடுக்கலாமா என்றுகூட நான் யோசித்தேன் என்று அவர் தெரிவித்தார்.
அதையடுத்து, சமீபத்தில் அப்படத்தின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடந்தபோதும் நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் அப்போதும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம். லீடு ரோலில் நடித்த ஒரு நடிகை இப்படி வேறு படங்களில் பிசியாக இருப்பதாக காரணம் சொல்லிக்கொண்டு விழாக்களுக்கு வராமல் தவிர்ப்பதால், அப்படக்குழுவினர் நயன்தாராவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து, தான் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு படத்தை நயன்தாரா தவிர்க்கிறார் என்றால், அவர்களுக்குள் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது. இல்லாமல் இப்படி செய்ய மாட்டார் என்று சிலர் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இதுகுறித்து நயன்தாராவை தொடர்பு கொண்டு விசாரித்தவர்களிடம் அவர் மெளனத்தையே பதிலாக்கி விட்டாராம்.
ஆக, ஏதோ நடந்திருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை...