ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடன மாஸ்டராக இருந்து தூத்துக்குடி படம் மூலம் ஹீரோ ஆனவர் ஹரிகுமார். அந்த படம் வெற்றி பெற்றதால் அதன்பிறகு படங்களில் நடன மாஸ்டராக வேலை செய்வதை தவிர்த்துவிட்டு முழுநேர நடிகராக களமிறங்கினார் ஹரிகுமார். அப்படி இதுவரை தூத்துக்குடி, திருத்தம், மதுரை சம்பவம் , போடி நாயக்கனூர் கணேசன் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் நடித்த படம் சங்கராபுரம். இந்த படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். கலாபவன் மணி அவருக்கு அப்பாவாகவும்,வில்லனாகவும் நடித்திருக்கிறார். எப்போதோ முடிந்து ரிலீசுக்கு அப்படம் தயார் நிலையில் உள்ளது. ஆனால், படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கிறார்களாம். அதனால் படம் எப்போது ரிலீசாகும் என்பதே புதிராக உள்ளது.
இதனால் படம் வெளியானதும் புதிய படத்தை தொடங்கலாம் என்று பல மாதங்களாக காத்துக்கொண்டிருந்த ஹரிகுமார். இப்போது மோடி மஸ்தான் என்ற பெயரில் ஒரு கதையை ரெடி பண்ணி அதை தானே இயக்கி நடிக்கும் வேலைகளில் இறங்கி விட்டார். பக்கா கமர்சியல் கதையில் உருவாகும் இப்படத்தில் சில கமர்சியல நடிகர்களையும், ஒரு கமர்சியல் நடிகையையும் இணைத்துக்கொண்டு களத்தில் இறங்கப்போவதாக சொல்கிறார் ஹரிகுமார்.