ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் ஈ படம் இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபாலி என்ற பிரமாண்ட சரித்திர படம் எடுத்து வருகிறார். இதில் அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழில் மகாபலி என்ற பெயரில் தயாராகிறது. இதன் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மணை ஷெட் போட்டு படமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோச்சடையான் தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற ரஜினி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் "உங்கள் ஷூட்டிங்கை பார்க்க அனுமதிப்பீங்களா?" என்று கேட்டிருக்கிறார். நீங்க எப்ப வேணாலும் வரலாம் சார் என்ற அவர் பதில் சொல்ல. அடுத்த நாளே பாகுபாலி படப்பிடிப்பு தளத்தில் நின்றார் ரஜினி.
அங்கு போடப்பட்டிருந்த பிரமாண்ட அரண்மணை செட்டை பார்த்து அதன் செலவு விபரத்தை கேட்டு தெரிந்து கொண்டார். பின்னர் படத்தில் நடிக்கும் அனுஷ்கா உள்ளிட்ட கலைஞர்களை பாராட்டிவிட்டுச் சென்றார். ரஜினி அங்கிருந்த ஒரு மணி நேரமும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுபற்றி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி "சூப்பர் ஸ்டார் என்னோடு இருந்த தருணங்கள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்கள்" என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
ரஜினி, அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ஒரு ஹிஸ்டாரிகல் பேண்டஸி படத்தில் நடிக்க இருப்பதும். அதில் அவருக்கு ஒரு ஜோடியாக அனுஷ்காக நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.