பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
3 ஆண்டு இடைவெளிக்குப்பிறகு வடிவேலு நடிப்பில் வெளியான படம் 'தெனாலிராமன்'. ஆரம்பத்தில் இருந்தே சில பிரச்னைகளுக்கு நடுவே வளர்ந்து வந்த அப்படம், திரைக்கு வரும் நேரத்தில் தெலுங்கு அமைப்புகளின் எதிர்ப்புக்கு ஆளானது. அதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தைக்குப்பிறகு தியேட்டருக்கு வந்தது. மேலும், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படத்தில் போதுமான காமெடி காட்சிகள் இல்லை. அதோடு, வடிவேலு செய்திருந்த சில காமெடி காட்சிகள் சிரிப்பை வரவைக்கவில்லை. மாறாக, வெறுப்புக்கு உள்ளானது. அதனால், இரண்டொரு நாட்களிலேயே படம் சுருண்டது.
இதனால் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார் வடிவேலு. விளைவு, இனி ஹீரோ வேசம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ள அவர், தொடர்ந்து காமெடியனாக வலம் வரப்போகிறாராம். இந்த நேரம் பார்த்து, வடிவேலுவுக்குப்பிறகு நம்பர்-ஒன் காமெடியனாக இருந்த சந்தானம் ஹீரோவாகி, காமெடி வேடங்களில் நடிக்க மறுத்து வருவதால், வடிவேலுவின் ரூட் க்ளியராகி விட்டது. அதனால் சந்தானத்துக்காக கதை பண்ணிய சில டைரக்டர்கள் அதில் திருத்தம் செய்து இப்போது வடிவேலுவை நாடி வருகின்றனர்.
ஆக, அடுத்து காமெடி கேரக்டர்களில் ஒப்பந்தமாகும் வேலைகளில் இறங்கிவிட்டார் வைகைப்புயல் வடிவேலு.