ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாசரின் மகன் லுதுஃபுதீன், சைவம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் நாசரின் பேரனாக நடிக்கிறார். மகன் நடிக்க வந்திருப்பது பற்றி நாசர் கூறியிருப்பதாவது: ஆரம்பத்தில் அவனுக்கு நடிக்கும் ஆர்வம் இல்லை. ஒரு இயக்குனராக வரவேண்டும் என்பதே அவர் லட்சியமாக இருந்தது. மேற்கத்திய இசையை முறையாக கற்றுக் கொண்டிருக்கிறான். திடீரென்று சைவம் வாய்ப்பு வந்தது. இயக்குனர் விஜய் எங்க வீட்டு பிள்ளை. அவரின் பேச்சை மீற முடியாது. அதனால் நடிக்க சம்மதித்தேன், நடிப்பு பிறவியில் இருந்தெல்லாம் வராது பயிற்சியின் மூலம்தான் வரும்.
அதனால் அவனை டெல்லிக்கு அனுப்பி என்.கே.சர்மாவிடம் நடிப்பு கற்றுவரச் செய்தேன். சர்மாதான் ஷாருக்கானுக்கே நடிப்பு சொல்லிக் கொடுத்தவர். அதன் பிறகு நடிகர் சண்முகராஜன் பயிற்சி கொடுத்தார். அதன் பிறகு நான் அவனை நடிக்கை வைத்து எனக்கு திருப்தி வந்த பிறகே கேமரா முன்னாடி நிற்க வைத்தேன். தொடர்ந்து நடிப்பதும், படம் இயக்குவதும் அவன் விருப்பம் என்றார் நாசர்.