ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கெளதம் கார்த்திக் நடிப்பில் கடல் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதையடுத்து, சிப்பாய், வை ராஜா வை, என்னமோ ஏதோ, நானும் ரவுடிதான், இந்திரஜித் என பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் பல நடிகைகளுடன் நடிப்பதால், ரொமான்டிக் நடிப்பில் நிறையவே தேறி விட்டாராம் கெளதம்.
இதுபற்றி கெளதமுடன் வை ராஜா வை படத்தில் டூயட் பாடியுள்ள ப்ரியாஆனந்த் கூறுகையில், கெளதமை விட நான் சினிமாவில் சீனியர். 2009ல் ஜெய்யுடன் வாமனன் படத்தில் நடித்த நான், அதன்பிறகு 15 படங்கள் வரை நடித்து விட்டேன். இந்த 6 வருடத்தில் பல மாறுபட்ட கேரக்டர்களில நடித்து விட்டேன். குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் ஒவ்வொரு நடிகருடன் நடிக்கும்போதும் ஒவ்வொருவிதமான அனுபவம் கிடைத்தது.
அந்த வகையில், வை ராஜா வை படத்தில் கெளதமுடன் நடிக்கும்போது அவர் ரொம்ப சின்ன பையனாச்சே. நமக்கு இணையாக நடிப்பாரா என்று நான் மனதளவில் நினைத்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட ரொமான்ஸ் காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டி நடித்தார் அவர். நானே சில நேரங்களில் கூச்சப்பட்டு நின்றாலும் அவரை சிறிதும் தயங்காமல் நெருங்கி நடித்தார். அந்த வகையில், தற்போது நடிப்பில் கெளதம் நிறையவே தேறி விட்டதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது என்று சொல்லும ப்ரியா ஆனந்த், தற்போது நான் நடித்திருக்கும் படங்களில் வை ராஜா வை, இரும்புக்குதிரை, அரிமா நம்பி இந்த மூன்று படங்களுமே எனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்.