ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சினிமாவில் நடிக்க சான்ஸ் கொடுத்தால் அந்த படத்துல எத்தனை பாட்டு வேண்டுமானாலும் காசு வாங்காம பாடுவேன் என்கிறார் ரம்யா நம்பீசன். நடிகை ரம்யா நம்பீசன் இப்போது தமிழில் பாடகியாகவும் வளர்ந்து வருகிறார். பாண்டிய நாடு படத்தில் "பை பை கலாசி பை..."க்கு பிறகு அவருக்கு நிறைய பாட்டு வாய்ப்புகள் வருகிறது. சமீபத்தில் வெளியான டமால் டுமீல் படத்தில் "போகதே..." என்ற பாடலை பாடி உள்ளார். அடுத்து அருள்நிதியுடன் நடிக்கும் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் பாடியிருக்கிறார்.
பாடகியானது பற்றி அவர் கூறியிருப்பதாவது: அடிப்படையில் நான் பாடகி. அப்புறந்தான் நடிகை. முறைப்படி சங்கீதம் படிச்சிருக்கேன். மலையாளம் தெலுங்கில் நிறைய பாடியிருக்கேன். தமிழில் இப்போதுதான் பாட ஆரம்பித்திருக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் பாடுவதற்கு நான் தனியாக சம்பளம் பெறுவதில்லை. தனியா பாட அழைத்தால் ஒரு பாடகிக்கு என்ன சம்பளம் தரவேண்டுமோ அதனை வாங்கிக் கொள்வேன்.
பீட்சா ஹிட்டானாலும் தொடர்ந்து தமிழில் நடிக்காததற்கு காரணம், மலையாளத்தில் பிசியாக இருந்ததுதான். இப்போது தமிழில் நான்கு படங்களில் நடிக்கிறேன். தெலுங்கு படங்களில் நடிக்கவில்லை. இந்தி வாய்ப்பு வந்திருக்கிறது. நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை. காதல், திருமணம் எனது பர்சனல் விஷயம். அதைப் பற்றி இப்போது மட்டுமல்ல எப்போதும் மீடியாக்களிடம் ஷேர் பண்ணிக்க மாட்டேன் என்கிறார் ரம்யா.