ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை நமீதா நடித்து வரும் புதிய படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சிலர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. பரபரப்பான இந்த சம்பவம் நடந்தது ஆந்திராவில்!. தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் பாலகிருஷ்ணா நடிக்கும் சிம்மா படத்தில் அவருக்கு ஜோடியாக நமீதா நடிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் ஐதராபாத் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. சம்பவத்தன்று ஐதராபாத் அடுத்த ராம்பள்ளி என்ற கிராமத்தில் சிம்மா பட சூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த தெலுங்கானா ஆதரவாளர்கள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தனர். பாலகிருஷ்ணா பங்கேற்கும் சூட்டிங்கை நடத்த விட மாட்டோம் என்று கூறி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தனர்.
தொடர்ந்து போலீஸ் பாடுகாப்பு போடப்பட்டிருந்தாலும், விலையுயர்ந்த கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களுக்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் சூட்டிங்கை ரத்து செய்த டைரக்டர் சீனு, வேறு ஸ்பாட்டில் சூட்டிங்கை நடத்திக் கொள்ளலாம் என அங்கிருந்து புறப்பட்டு விட்டனர். சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே தெலுங்கானா ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால், நடிகர் பாலகிருஷ்ணாவும், நடிகை நமீதாவும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவில்லை.