ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிசோடா படத்தை இயக்கிய விஜய்மில்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதேசமயம், இன்னொரு படத்திற்கான ஸ்கிரிப்டையும் அவர் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அந்த படத்தில் டி.ராஜேந்தர் நடிக்கப்போகிறாராம்.
மேலும், இதுவரை டி.ஆர் என்றாலே இந்த மாதிரிதான் நடிப்பார். இந்தமாதிரி கெட்டப்பில்தான் வருவார் என்பதை மாற்றிக்காட்டும் வித்தியாசமான இந்த கதைக்களத்தில் அவருக்கு மாறுபட்ட வேடமாம். கதாநாயகன் என்பதில்லாமல் கதையின் நாயகனாக அவரை வெளிப்படுத்தும் கதையாம். அதனால், ஒருவேளை தற்போது தான் விக்ரமைக்கொண்டு இயக்கும் படம் சிறிது காலதாமதம் ஆக நேர்ந்தால், அந்த இடைவெளியில் டி.ஆர் நடிக்கும் படத்தை ஆரம்பித்து விடுவாராம் விஜய் மில்டன்.
ஆக, கடைசியாக வீராசாமியைத் தொடர்ந்து ஒரு தலை ராகத்தை, ஒரு தலை காதலாக எடுக்கப்போகிறேன் என்று களமிறங்கிய டி.ஆர்., அப்படத்துக்காக இரண்டு இளவட்ட நடிகைகளை புக் பண்ணி கொல்லிமலையில் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தி விட்டு, இனி நாம் ஹீரோவாக நடித்தால் படம் போணி ஆகாது என்று அந்த படத்தையே கிடப்பில் போட்டு விட்டார்.
அதோடு, கடந்த இரண்டு வருடங்களாக நடிப்பு ஆசையை ஓரங்கட்டி வைத்து விட்டு பின்னணி பாடி வரும் அவருக்கு, இப்போது திடீர் ஹீரோ வாய்ப்பு கிடைத்திருப்பதால், சந்தோசம் தாங்காமல், வாடி ஏன் மச்சி வாழைக்காய் பச்சி என்று தலைமுடியை கோதிவிட்டபடி, கோதாவில் இறங்க வரிந்து கட்டிக்கொண்டு தயார் நிலையில் உள்ளார் மனிதர்.