ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எங்கேயும் எப்போதும் சரவணன் தறபோது ஜெய் நடிப்பில் ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் நாயகியாக ஆண்ட்ரியா நடிப்பதாகத்தான் அவர் தரப்பில் இருந்து முதலில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அந்த செய்தி வெளியான சில நாட்களில் அப்படத்துக்கு அஞ்சலி கமிட்டாகியிருப்பதாக இன்னொரு செய்தி ஊடகங்களில் வெளியாகின.
இதனால் அதிர்ச்சியடைந்தது டைரக்டர் சரவணன் அல்ல, நடிகை ஆண்ட்ரியாதான். ஒரு வாரத்திற்கு முன்புதானே அட்வான்ஸ் வாங்கி அக்ரிமென்டில் சைன் போட்டோம். அதற்குள் அஞ்சலி எங்கிருந்து வந்தார் என்று உத்தமவில்லன் படப்பிடிப்பில் இருந்த அவர், அவசர அவசரமாக டைரக்டர் சரணவனை தொடர்பு கொண்டு விசாரித்தாராம்.
அதையடுத்து, இது நான் வெளியிட்ட செய்தியல்ல. சமீபகாலமாக ஊடகங்களில் வெளியாகும் வதந்திகளில் இதுவும் ஒன்று என்று அவரை தெளிவுபடுத்தினாராம் அவர். அதன்பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டாராம் ஆண்ட்ரியா. இதையடுத்து, தான் நடிக்கும் படங்களை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்த உத்தமவில்லன், தரமணி, அரண்மனை ஆகிய படங்களை குறிப்பிட்டு நான்காவதாக ஜெய்யுடன் ஒரு படம் என டுவிட் செய்திருக்கிறார் ஆண்ட்ரியா.