ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாக நடிக்கிறார், தயாரிப்பாளராக இருக்கிறார். காமெடியாக நடிக்க ஒரு நாளைக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு படத்திலும் காமெடி வாயிலாக மக்களுக்கு அட்வைசும் கொடுத்து வருகிறார். நாள் ஒன்றுக்கு 15 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சந்தானம். தன் அலுலகத்தின் மின் இணைப்பை, வீட்டு இணைப்பு என்று பொய் சொல்லி ஏமாற்றி அனுபவித்து வந்துள்ளார். இதை கண்டுபிடித்த மின்சார வாரியம் அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது. சத்தமே இல்லாமல் அபராதத்தை கட்டிவிட்டு படத்தில் நடிக்க போய்விட்டார் சந்தானம்.
விருகம்பாக்கம் ஸ்டேட் பேங்க காலணியில்தான் சந்தானத்தின் அலுவலகம் உள்ளது. பல வருடங்களாக அலுவலகம் செயல்பட்டு வந்தாலும் அதனை வீடு என்று கூறி சலுகை கட்டணத்தில் மின்சாரம் பெற்று வந்திருக்கிறார்கள். அதை மின்வாரியத்தின் பறக்கும் படை கண்டுபிடித்து அபராதம் விதித்திருக்கிறது. 60 ஆயிரம் ரூபாய் சந்தானத்திற்கு சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் நாடறிந்த கலைஞன் நாட்டுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டாமா?- என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.