ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, பிரகாஷ்ராஜ்-சந்தானம் நடித்த அறை எண் 305ல் கடவுள், லாரன்ஸ் நடித்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அருள்நிதி நடித்த ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கியவர் சிம்புதேவன். இதில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி சூப்பர் டூப்பர் ஹிட் படம்.
இந்நிலையில், அடுத்து விஜய்க்கு சிம்புதேவன் ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அதைக்கேட்டு திருப்தியான விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதாகவும் செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட விஜய் மற்றும சிம்புதேவன் தரப்பில் இருந்து இதுபற்றிய எந்தவித அதிகாரப்பூர்வமான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
அதனால், இதுபற்றிய உண்மை நிலவரத்தை அறிய டைரக்டர் சிம்புதேவனை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது-
விஜய் சாரிடம் கதை சொன்னது, அவர் நடிக்க சம்மதம் சொன்னது எல்லாமே உண்மைதான். இருப்பினும், தற்போது கத்தியில் நடித்து வரும் விஜய், அடுத்து நான் இயக்கும் படத்தில் நடிப்பது பற்றி இன்னும் உறுதியாக சொல்லவில்லை. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அவரும் பிசியாக இருப்பதால், அதுபற்றி நானும் பேசவில்லை.
அதனால் கத்தி படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் இதுபற்றி சொல்ல முடியும் என்று தெரிவித்த சிம்புதேவன், இப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் செய்திகள் எனது தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை. அதுவாக பரவிக்கொண்டிருக்கிறது. மேலும், விஜய் சார் படத்தை நான் இயக்குவது பற்றிய ஒப்பந்தம் முடிவானதும். தினமலருக்கே முதல் செய்தியை தருவேன் என்றார் சிம்புதேவன்.