ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலு நடித்துள்ள தெனாலிராமன் படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில தமிழ் அமைப்புகள் வடிவேலுவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. வருகிற 18ந் தேதி படம் வெளியாகும் சூழ்நிலையில் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு திரைப்படத்தை பார்க்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள தணிக்கை குழு பார்த்து சான்றிதழ் வழங்கிய பிறகு எங்களிடமும் காட்டி சான்றிதழ் பெற வேண்டும் என்றால் அப்படி கேட்பவர்கள் மற்றுமொரு அரசாங்கமா, தணிக்கை செய்யப்பட்ட படத்தில் கருத்து வேறுபாடு இருக்குமானால் தணிக்கை குழுவிடம்தான் கேட்க வேண்டும். பெரும் தலைவர்களையே கேலி சித்திரம் வரைகிறார்கள். மிகப்பெரிய சர்வாதிகளை ஹிட்லரை கிண்டல் செய்து சார்லி சாப்ளின் படம் எடுத்தார். அது கலைஞர்களின் படைப்பு சுதந்திரமம்.
சமீபகாலமாக திரை உலகை நோக்கி திரும்பியுள்ள இந்த எதிர்ப்புகள் மதம், இனம், மொழி சார்ந்து வருகிறதா என்று புரியவில்லை. சினிமாவில் உள்ள பல்வேறு அமைப்புகள் சிதைத்திருப்பதால் தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்களாகிவிட்டார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று தமிழன் வடிவேலுக்கு வைக்கப்பட்டுள்ள வெடி நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் வைக்கப்படலாம். ஒற்றுமையாக இருந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் கூறியுள்ளார்.