ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்தி சினிமாவின் பாடலாசிரியரும், இயக்குநருமான குல்சாருக்கு, சினிமாவிற்கு, மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1934-ம் ஆண்டு பிறந்தவர் குல்சார். இவரது இயற்பெயர் சம்பூரண சிங் கல்ரா. 1963ம் ஆண்டு வெளியான பந்தினி என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் குல்சார். தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமானார். இந்தி, பஞ்சாபி, உருது உள்ளிட்ட மொழிகளில் கவிதைகளும், பாடல்களும் எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டுமல்லாது இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் சினிமாவில் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. அவரது 79வது வயதில் மத்திய அரசு இவருக்கு இந்த விருதை அறிவித்துள்ளது. குல்சார் ஏற்கனவே 2002ம் ஆண்டு சாகித்ய அகடாமி விருதும், 2004ம் ஆண்டு பத்மபூசன் விருதும் பெற்றுள்ளார். இதுதவிர நிறைய தேசிய விருதுகள் மற்றும் 20 பிலிம் பேர் விருதுகள் உள்ளிட்ட ஏகப்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.