பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வரும் அடடா அடடா..., கந்தசாமியில் வரும் அலேகா அலேகா... உள்ளிட்ட பல பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி இருப்பவர் சரவண ராஜன். இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக இருந்தவர், இப்போது வடகறி படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கி உள்ளார். ஜெய் ஹீரோவாகவும், சுப்ரமணியபுரம் சுவாதி ஹீரோயினாகவும் நடிக்கிறார். இப்படத்தின் இயக்குநர் சரவண ராஜனிடம் பேசுகையில், அதென்ன படத்திற்கு வடகறி என்று பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு அவர், ஒரு சாதாரண குடும்பத்து பையன் விலையுர்ந்த செல்போன் வாங்கவும், பின்னர் அந்த செல்போனால் அவர் படும் பாடும் தான் படத்தோட கதை. இதற்கும் படத்தின் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லையே என கேட்டால், அதான் ஹைலைட்டான விஷயம் என்கிறார். மேலும் இப்படத்தில் சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த வடகறி பிடிக்கும் என்றார்.