பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
தமிழ் சினிமாவில் பெப்சியை தலைமையாக கொண்டு 23 தொழிற்சங்கங்கள் உள்ளது. இதுதவிர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்டு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவைகள் உள்ளது. இதுதவிர இப்போது புதிய சங்கம் ஒன்று உருவாகி உள்ளது.
தமிழ் இலக்க(டிஜிட்டல்) குறும்பட மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் நலச் சங்கம் என்பது அதன் பெயர். இதன் தலைவராக கலைபுலி ஜி.சேகரனும், செயலாளராக பூபதி ராஜாவும் உள்ளனர்.
இதன் துவக்க விழா சென்னையில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவில் சேம்பர் தலைவர் கல்யாண், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினர்.
"இது எந்த சங்கத்திற்கும் போட்டியானது அல்ல. திரைப்படம் தவிர குறும்படம், ஆவணப்படங்கள் எடுப்பது அதிகரித்துள்ளது. அவர்களுக்கு உதவி செய்யவும், ஆலோசனை வழங்கவுமே இந்த சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது தனித்த அமைப்பாக செயல்படும், சினிமாவுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பில்லை" என்கிறார். சங்கத்தின் தலைவர் கலைப்புலி ஜி.சேகரன்.