ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினியை வைத்து ஏற்கனவே சுல்தான் தி வாரியர் என்ற அனிமேஷன் படத்தைதான் முதலில் ஆரம்பித்தார் அவரது இளைய மகளான செளந்தர்யா. ஆனால் சில பல காரணங்களால் அப்படம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து ரஜினி நடிக்கயிருந்த ராணா அவரது உடல்நலம் கருதி கிடப்பில் போடப்பட்டதையடுத்து, அதே சுல்தான் தி வாரியரில் சிலபல மாற்றங்களை செய்து அதை கோச்சடையானாக மாற்றினார் செளந்தர்யா. அப்படம்தான் இப்போது மோஷன் கேப்சர் தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ளது.
இந்த நிலையில், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு கிடப்பில் கிடக்கும் ராணா படத்தையும் தானே இயக்கப்போவதாக தற்போது தெரிவித்துள்ளார் டைரக்டர் செளந்தர்யா. ஆனால் அதிரடியான கதைகளில் ரஜினி நடிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதால், ராணா படத்தையும் கோச்சடையானைப்போன்றே அதிநவீன தொழில் நுட்பத்தில்தான் இயக்கப்போகிறாராம்.
இதுகுறித்து இதுவரை தந்தை ரஜினியிடத்தில் அவர் தெரிவிக்காதபோதும், கோச்சடையான் ரிலீசுக்குப்பிறகு ராணா குறித்து பேசப்போவதாக சொல்லும் செளந்தர்யா, அந்த கதையையும் பக்காவாக ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம்.