ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வைக்கும் போக்கு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பெரிய ஹீரோக்கள் நடிக்க, பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களில் இந்தி நடிகைகளை ஆட வைப்பதன் மூலம் தங்கள் படத்தின் பவரைக் காட்ட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள். ஹீரோக்களும் தங்களுக்குள் இருக்கும் போட்டி காரணமாக தனது போட்டி ஹீரோ ஒரு நடிகையை ஆட வைத்தால் இவர் இன்னொரு நடிகையை ஆட வைக்க முயற்சிக்கிறார்.
இப்போது பெரிய பட்ஜெட் படங்கள் என்றில்லாமல் மீடியம் பட்ஜெட் படங்களிலும் இந்தி நடிகைகளை ஆட வைக்கிறார்கள். ஒஸ்தி படத்தில் மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஆட்டம் போட வைத்தார் சிம்பு, நான் ராஜா வாக போகிறேன் படத்தில் ஷரின்கான் ஆடினார். சூர்யா நடித்த மாற்றான் படத்தில் இஷா ஷிர்வானி ஆடினார். இப்போது தயாரிப்பில் உள்ள வடகறி படத்தில் சன்னி லியோன் ஆடியிருக்கிறார். இதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 90 லட்சம். இது அந்தப் படத்தின் நாயகிக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட மிக அதிகம்.
தற்போது லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் இந்தி நடிகை சித்ராங்கடா ஆடியுள்ளார். மும்பையில் நடந்த படப்பிடிப்பில் 3 நாட்கள் ஆடியவருக்கு ஒரு கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. படப்பிடிப்புக்கு ஆன செலவு இரண்டு கோடி என்கிறார். அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் கரீனா கபுரை ஆட வைக்க முயற்சித்து வருகிறார்கள். விஜய் நடிக்கும் கத்தி படத்திலும் முன்னணி இந்தி நடிகை ஒருவர் ஆட இருக்கிறார்.
இந்தி நடிகைகளின் இந்த குத்தாட்டத்தால் படத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதுதான் கடந்த கால அனுபவம் சொல்லும் உண்மை. ஆனால் தயாரிப்பாளருக்கு வீண் செலவு. ஒஸ்தி, மாற்றான், நான் ராஜாவாக போகிறேன் படங்கள் இந்தி நடிகைகள் ஆடியும் தோல்விதான் அடைந்தன. அப்படி இருந்தும் ஒரு பாட்டுக்கு ஆட இந்தி நடிகைகளைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்தி நடிகைகள் அங்கு ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தாலும் இங்கு குத்தாட்டம் போடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் மூன்று முதல் 5 நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும். குறைந்தது ஒரு கோடி சம்பளம் அதாவது குறைந்த உழைப்பில் கை நிறைய காசு. அப்புறம் ஏன் ஆட ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
ஹீரோக்களின் ஈகோவாலும், தேவையில்லாத பளபளப்பாலும் தயாரிப்பாளர்கள்தான் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.