ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரு திரு துறு துறு படத்தில் அறிமுகமான சென்னை பொண்ணு ரூபா மஞ்சரி. அதற்கு பிறகு நான் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடித்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது சிவப்பு, யாமிருக்க பயமேன் படங்களில் நடித்து வருகிறார். தனது ரீ-என்ட்ரி பற்றி ரூபா கூறியதாவது: நான் சினிமாவில் தொடர்ந்து நடிச்சிட்டுதான் இருக்கேன். இடையில் மலையாள படங்களில் நடித்ததால் தமிழில் சின்ன கேப் விழுந்திருச்சு. இப்போ திரும்பவும் வந்திருக்கேன். அதனால் இதை ரீ-என்ட்ரின்னு சொல்ல முடியாது. மலையாளத்துல மல்லுசிங், டோர்னமெண்ட் படங்கள்ல நடிச்சிருக்கேன். தொடர்ந்து அங்கு வாய்ப்புகள் வந்தாலும் சொந்த மொழியில் நடிக்கிறதுதானே பெருமை.
சிவப்பு படத்தில் தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதியாக நடிச்சிருக்கேன். கட்டிட வேலை செய்ற பொண்ணு. கொஞ்சம்கூட மேக்அப் போடாமல் இயல்பா நடிச்சிருக்கேன். நிஜமாவே கல் சுமந்து, மண் சுமந்து நடிச்சேன். படத்துல நடிக்கிறப்போ நிஜமான சில இலங்கை அகதிகளை சந்திச்சு பேசினேன். அவுங்களோட கதைகேட்டு அழுதிட்டேன். படத்துல அழுகுற சீன் வரும்போதெல்லாம் அவுங்க சொன்ன கதையை நினைச்சுக்குவேன் நிஜமாவே அழுகை வந்துடும். யாமிருக்க பயமேன் த்ரில்லர் மூவி. கிருஷ்ணாவோட காதலியா நடிச்சிருக்கேன். இனி தமிழ் படங்களில் அதிகமாக நடிப்பேன். என்கிறார் ரூபா.