ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் பிறந்த மண், மக்கள், இசைக்கு நன்றி செலுத்தும் வகையில், மதுரையில், இசையால், ரசிகர்களை இளையராஜா தாலாட்டினார். தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர், உடல் நலம் குன்றியிருந்தபோது, அப்பகுதி மக்கள், போன் மூலம், உடல்நலம் விசாரித்தனர். இதற்கு நன்றி செலுத்தும் வகையிலும், பண்ணைப்புரத்தில் கட்டப்படும் பள்ளிக்கு நிதி உதவி அளிக்கும் வகையிலும், மதுரையில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த, இளையராஜா குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக மகன் கார்த்திக்ராஜா வழங்கிய இளையராஜாவின் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சி, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் தலைமை வகித்தார். அவர்,சித்திரைத் திருவிழாவின் போது அழகர்மலையிலிருந்து வரும் ராஜாவை(அழகர்) பார்க்க கூட்டம் கூடும். அதற்கு ஈடாக, மதுரை மேற்குப் பகுதியிலிருந்து வந்துள்ள இளையராஜாவை பார்க்க கூட்டம் வந்துள்ளது, என்றார்.
ஜனனி, ஜனனி...,ஜெகம் நீ..., பாடலை ஆர்மோனியப்பெட்டியை இசைத்தவாறு, இளையராஜா உருக்கமாகப் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினார். கூட்டம் மெய்மறந்து, தலையசைத்தது. இளையராஜா, பாடகர்கள் ஹரிகரன், சித்ரா, மனோ, ஹரிச்சரண், விஜய் பிரகாஷ், சாதனா சர்க்கம், ஷாலினி, அனிதா மற்றும் இளையராஜாவின் இசைக்குழுவில் 38 ஆண்டுகளாக இடம் பெற்றுவரும் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் கூட்டத்தை பலமணி நேரம் இசையால் கட்டிப்போட்டனர்.
பாடல் ஒலிப்பதிவுக் கூடத்தின் தரத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில், துல்லியமான ஆடியோ சிஸ்டங்கள் மூலம் இசை ஒலி பாய்ச்சப்பட்டது. மெகா திரைகள், நடனமாடும் விளக்குகள் என மைதானமே புதுமை பூண்டிருந்தது. கோடையை இதமாக்கும் மழையைப்போல், தான் பிறந்த மண்ணின் இசையை, அதே மண்ணின் மக்களுக்கு படைத்தது, புது வரலாறு.
ரசிகர் மன்றம் உதயம்
இந்த இசை நிகழ்ச்சி உடனே, இளையராஜாவின் ரசிகர் மன்றம் துவக்க நிகழ்ச்சியும் நடந்தது. இசைஞானி பேன்ஸ் கிளப் டிரஸ்ட் எனும் பெயரில் துவக்கப்பட்டுள்ள இந்த ரசிகர் மன்றத்துக்கு, இளையராஜாவின் மகள் பவதாரிணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாராயோ வெண்ணிலாவே ஆடியோ சிடி., வெளியீடு
இந்த விழாவுடனேயே கார்த்திக் ராஜா இசையமைப்பில், அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாராயோ வெண்ணிலாவே படத்தின் ஆடியோ சி.டி.யும் வெளியிடப்பட்டது. கூடவே இப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. இளையராஜா படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட கார்த்திக் ராஜா பெற்றுக்கொண்டார். கூடவே படத்தின் இயக்குநர் சசிதரண், ஹீரோயின் ஹரிப்பிரியா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கார்த்திக்ராஜாவுடன் இணைந்து ஸ்பிலண்டர் ஐ ஸ்மார்ட், நிகழ்ச்சியை வழங்கியது. அசோசியேட் ஸ்பார்ன்ஸ்கள்- ஜி ஒன் மொபைல், டியூலக்ஸ் வெதர்ஷில்ட் மேக்ஸ், அருண் ஐஸ்கிரீம், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய பல்கலை. பிரஸ் பார்ட்னர் தினமலர் நாளிதழ், ரேடியோ பார்ட்னர் ஹலோ எப்.எம்., மீடியா பார்ட்னர் ராஜ் டிவி. ஆன்லைன் பார்ட்னர் ராகா. பண்ணைப்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரசிகர்கள் பங்கேற்றனர். நடிகை சுகாசினி தொகுத்து வழங்கினார்.