ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த 7 வயது பேபி சாராவை கதாநாயகியாக வைத்து டைரக்டர் விஜய் இயக்கியுள்ள படம் சைவம். இந்த படத்தில் நாசர் உள்பட பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா ஏப்ரல் 05ம் தேதி இரவு 7 மணி அளவில் சென்னை தி.நகரில் நடைபெற்றது.
விழாவுக்கு கேயார், விக்ரமன், பார்த்திபன், சித்தார்த்,ஜெயம்ரவி,விஜய்சேதுபதி,அனுஷ்கா, நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பார்த்திபன் பேசுகையில், என்னைப் பொறுத்தவரை சைவ உடை என்றால் அது வேஷ்டி சட்டைதான். அதனால்தான் இந்த விழாவுக்கு வேஷ்டி அணிந்து வந்திருக்கிறேன. மேலும், சமீபத்தில் யு டியூப்பில் ஒரு பூனையின் தலையை சிங்கம் கடிப்பது போன்று ஒரு காட்சியைப் பார்த்தேன். அப்போது சிங்கம் கடித்துக் கொண்டிருக்கும்போதே, அந்த பூனையின் வயிற்றுக்குள் இருந்து ஒரு குட்டி வெளியே வரும்.
அப்போது அந்த குட்டியை அந்த சிங்கம் பிடிக்கும். அந்த நேரம் பார்த்து அங்கே வந்த இன்னொரு சிங்கம் அந்த சிங்கத்தை துரத்தி விட்டு அந்த பூனைக்குட்டியை தன் குட்டி போன்று தோளில் போட்டுக்கொள்ளும்.. இந்த இடத்தில் சிங்கம் சைவமா? அசைவமா? என்பது எனக்குத் தெரியவில்லை
இப்படியாக சிலபல உதாரணங்களை சுட்டிக்காட்டிய பார்த்திபன், கடைசியில, டைரக்டர் விஜய் பக்கம் திரும்பி, இந்த படத்தை விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பனே தயாரித்திருக்கிறார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவரது தயாரிப்புகளில் சிறந்த தயாரிப்பே விஜய்யை பெற்றதுதான் என்றார்.
அதையடுத்து, திருவள்ளுவருக்கு அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் இந்த மூன்றும்தான் தெரியும். ஆனால் நம்ம டைரக்டர் விஜய்க்கோ அமலாபாலும் தெரியும் என்று சொல்ல, விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. பார்த்திபனின் இந்த கலாய்ப்பில் டைரக்டர் விஜய்யும் குலுங்கி குலுங்கி சிரித்தார்.