ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலு கதாநாயகனாக நடித்து ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாக இருக்கும் தெனாலிராமன் படத்துக்கு எதிர்ப்பு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தெலுங்கு யுவசக்தி என்ற அமைப்பு தெனாலிராமன் படத்துக்கு எதிராக தணிக்கைக்குழுவில் புகார் கொடுத்ததோடு, காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்று காலை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை என்ற அமைப்பு அறிவித்தது. முன் எச்சரிகையாக குவிக்கப்பட்ட போலீஸ் படை, நடிகர் வடிவேலுவின் வீட்டை நோக்கி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தவர்களை வழியிலேயே கைது செய்துவிட்டது.
தெலுங்கு அமைப்பினர் தெனாலிராமன் படத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?
தெனாலிராமன் கதைகளை படித்திருக்கிறோம். அந்த வகையில் தெனாலிராமன் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவராகவும், நமக்கு நெருக்கமானவராக இருந்து வருகிறார். என்றாலும், வரலாற்றின் அடிப்படையில்பார்த்தால் தெனாலிராமன் தமிழர் அல்ல, தெலுங்கர். ஆந்திராவில் உள்ள தெனாலி மாவட்டத்தில் துமுலுரு என்ற கிராமத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த தெனாலிராமன், 16 ஆம் நூற்றாண்டில், விஜயநகரப் பேரரசை ஆட்சி செய்த கிருஷ்ண தேவராயரின் அரசவையில் அங்கம் வகித்தவர். தெனாலிராமன் நகைச்சுவை உணர்வும்மிக்கவர் என்பதால்தான் நகைச்சுவை நடிகரான வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு தெனாலிராமன் என்ற பெயரை சூட்டினர். இந்தப்படத்தில் தெனாலிராமனாக மட்டுமின்றி அரசன் வேடத்திலும் நடிக்கிறார் வடிவேலு.
தெனாலிராமன் படத்தில் வடிவேலு ஏற்று நடித்துள்ள அரசனுக்கு 36 மனைவிகள். இதுதான் தெலுங்கு அமைப்பைச் சேர்ந்தவர்களை டென்ஷனாக்கிவிட்டதாம். காரணம்.. தெனாலிராமன் படத்தில் குறிப்பிடப்படும் அந்த அரசன் வேடம் கிருஷ்ணதேவராயரையே குறிக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள். அதோடு, கிருஷ்ண தேவராயருக்கு 36 மனைவிகள் உள்ளதாக அசிங்கப்படுத்தி இருப்பதாகவும் கொதிக்கிறார்கள். தெனாலிராமன், கிருஷ்ண தேவராயர் இருவரும் வரலாற்றுப்படியும், பூகோளப்படியும் இன்றைய ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். எனவேதான், தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தெனாலிராமன், கிருஷ்ண தேவராயர் இருவரையும் காமெடி என்ற பெயரில் அசிங்கப்படுத்தி இருப்பார்களோ என்று சந்தேகப்படுகின்றனர். இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் தயாரிப்பாளர் தரப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.
தெனாலிராமன் படம் தெனாலிராமன் உட்பட பல நீதிக்கதைகளை தழுவிய கற்பனைக்கதை. இப்படம் தெனாலிராமன் வாழ்க்கையையோ, கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கையையோ குறிப்பது அல்ல. 15 ஆம் நூற்றாண்டு பின்னணியில் தற்கால நிகழ்வுகளைச் சொல்கிற புனைவு கதைஇய இது என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.