ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ருதி ஹாசன் சின்னத்திரைக்கு வருவது பேட்டி கொடுக்க மட்டும்தான் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார். முதன் முறையாக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அது புலிகள் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி. இந்தியாவின் தேசிய விலங்கான புலியை பற்றி வேர் டைகர் ரூல்ஸ் என்ற நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனல் ஏப்ரல் மாதம் முழுவதும் ஒளிபரப்புகிறது. தினமும் இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில் ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டு புலிகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம். புலியின் வாழ்க்கை முறை. உயரின சுழற்சிக்கு அவைகள் எவ்வாறு உதவி புரிகின்றன என்பது பற்றி விளக்கிக் கூறுகிறார். அதோடு காட்டு விலங்குகள் பாதுகாப்பு பற்றியும் பேசுகிறார். இயற்கையிலேயே ஸ்ருதி, விலங்குகள் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர் என்பதால் எந்த சன்மானமும் பெற்றுக் கொள்ளாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.