ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ்த்திரைத்துறையில் இதுவரை இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டிங் போன்ற துறைகளுக்குத்தான் பட்டயப்படிப்புகள் உள்ளன. பாடல் எழுதுவதற்கென்று எந்த படிப்பும் இருந்ததில்லை. ஆனால் முதன்முறையாக திரைப்படப் பாடல் எழுதுவது எப்படி என்பதை முறையாக பயிற்சி கொடுக்க தமிழ்த்திரைப்பாக்கூடம் என்றொரு பட்டயப் படிப்புக்கான பயிற்சி கூடத்தை நிறுவியுள்ளார் கவிஞர் ப்ரியன்.
இந்த திரைப்பாக்கூடத்தில் பாடல் எழுத பயிற்சி பெறும் மாணவர்களுக்கு திரைப்பட பாடலாசிரியர்களைக்கொண்டே பயிற்சி கொடுப்பதோடு, விஜய்ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்களையும் பயிற்சி கூட மாணவர்களிடம் கலந்துரையாட வைத்து, மெட்டுக்கேற்ப எப்படி பாடல்களை எழுதுவது என்றும் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறதாம். அதோடு, இசையமைப்பாளர்களிடமிருந்து மெட்டுக்களை வாங்கி, அதற்கு பயிற்சி பெறுபவர்களை பாடல் எழுத வைத்து, அந்த பாடலை பிரபல பாடகர்-பாடகிகளை வைத்தே பதிவு செய்தும் கொடுக்கப்படுகிறதாம். ஆக, ஒரு முழுமையான பாடலாசிரியராக அவர்களை உருவாக்கி அனுப்புகிறாராம் ப்ரியன்.
இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தமிழ்த்திரைப்பாக்கூடத்தில் தமிழகத்திலுள்ள ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி எடுத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்பவர், சிறந்த அடுத்த தலைமுறை பாடலாசிரியர்களை உருவாக்குவதே இந்த பயிற்சி கூடத்தின் தலயாய நோக்கம் என்கிறார்.