ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்ரன் நடித்த கிச்சா வயசு 16 படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஜிபாலா. நாகர்கோவிலைச் சேர்ந்தவர். அந்தப் படம் சரியாக போகாததால் அதன் பிறகு சந்திரமுகி, முத்துக்கு முத்தாக, கலவரம் உள்பட பல படங்களில் கிளாமர் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு பாட்டுக்கு ஆடினார். இடையில் அய்யாவழி உள்பட சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார். இந்த நிலையில் ரவிகுமார் என்பவர் தயாரித்து, இயக்கி நடிக்கும் உண்மை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்போது ரவிகுமார் சுஜிபாலாவை காதலித்துள்ளார்.
மீதியை சுஜிபாலா கண்ணீர் வழிந்தோட தொடர்கிறார்...
2011ம் ஆண்டு உண்மை படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆரம்பத்தில் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது. மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் சந்தோஷத்தில் இருந்தேன். ஆனால் பிறகுதான் உண்மை தெரிந்தது. இயக்குனர் ரவிகுமார் என்னை ஹீரோயினாக போட்டதற்கு வேறு உள்நோக்கம் இருக்கிறது என்று. முதல் காட்சியே முதலிரவு காட்சியைத்தான் படமாக்கினார். அப்போது வலுக்கட்டாயமாக நெருக்கமாக நடித்தார். திடீரென்று ஒரு நாள் என்னை காதலிப்பதாக சொன்னார். நான் சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் இப்போது நான் காதலிப்பதாக இல்லை என்று கூறிவிட்டேன்.
ஆனால் என் அம்மாவிடம் நான் ஒரு அநாதை. ஆனால் பணக்காரன் உங்கள் மகளை நான் கண்கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்று கூறி அவர்கள் மனதை மாற்றி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தார். நான் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தேன், காப்பாற்றிவிட்டார்கள், என் விருப்பம் இல்லாமலேயே நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை. அதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரித்து பார்த்ததில் அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் எனது அம்மாவும் உறவினர்களும் அந்த நிச்சயதார்தத்தை ரத்து செய்து விட்டனர். ஆனால் ரவிகுமார் தொடர்ந்து என்னையும், என் குடும்பத்தையும் மிரட்டத் தொடங்கியிருக்கிறார். போனில் ஆபாசமாக பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் அதை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
நானும் உண்மை படத்தின் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்லி அவர் வாங்கிய கடனை என் தலையில் சுமத்தப்பார்க்கிறார். கடன்காரர்கள் என்னிடம் வந்து கேட்கிறார்கள். ரவிகுமாருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எந்த நடன நிகழ்ச்சிக்கு போனாலும் அங்கு வந்து என்னை மிரட்டுகிறார். ஒருமுறை அடித்தார். இந்த சூழ்நிலையிலும் அவரது உண்மை படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடிகர் சங்கத்தின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடித்துக் கொடுத்தேன். ரவிகுமார் பற்றி நடிகர் சங்கத்திலும், வடபழனி போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளேன். ரவிகுமாரால் எனக்கும் என் பெற்றோர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவரிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளேன்.
இவ்வாறு சுஜிபாலா கண்ணீர்மல்க கூறினார்.
(அருகில் உள்ள படம்: உண்மை படத்தில் ரவிகுமார், சுஜிபாலா)