ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
1979ல் பாரதிராஜா இயக்கிய புதிய வார்ப்புகள் படத்தில் நாயகனாக நடித்தவர் கே.பாக்யராஜ். அதையடுத்து கன்னிப்பருவத்திலே, சுவரில்லா சித்திரங்கள் என்று பல படங்களை இயக்கி நடித்த அவர், 1983ல் முந்தானை முடிச்சு என்ற படத்தை இயக்கி நடித்தார். அந்தப்படத்தில் அவருடன் ஊர்வசி நடித்தார். இந்நிலையில் முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது மாப்பிள்ளை விநாயகர் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ஜீவா நாயகனாக நடிக்கிறார். அதாவது முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் மகனாக நடித்த அந்த குழந்தைதான் இப்போது வளர்ந்து பெரியவனாகியிருக்கிறாராம். அந்த வேடத்தில்தான் இந்த ஜீவா நடிக்கிறாராம். மேலும் கே.பாக்யராஜ்-ஊர்வசி இருவரும் அவருக்கு பெற்றோராகவே நடிக்கிறார்களாம்.
இப்படத்தில் நடித்தபோது பாக்யராஜ்-ஊர்வசி இருவருமே மலரும் நினைவுகளில் மூழ்கிப்போனார்களாம். அதோடு, கதையில் அதிக ஈடுபாடு காண்பித்து நடித்துள்ளார்களாம். மேலும், பழைய கதையின் தொடர்ச்சிதான் என்பதால், அப்போதைய விசயங்களை அவர்கள் நினைத்துப்பார்க்கிறபோது, முந்தைய படத்தின் சில சீன்களும் வந்து செல்கிறதாம்.