மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ரஜினி நடிக்கும் கோச்சடையான் படத்துக்கு மார்ச் 19 அன்று யு சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு. யு கிடைத்ததும் கோச்சடையான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளைப் பார்க்க உற்சாகமாக சீனாவுக்குக் கிளம்பிப்போனார் அப்படத்தின் இயக்குநரான சௌந்தர்யா ரஜினிகாந்த். அவர் சீனா சென்ற பிறகு கோச்சடையான் படத்தின் நிலவரம் பற்றிய செய்திகள் தினம் தினம் மீடியாக்களில் அப்டேட் செய்யப்பட்டன. அவற்றில் ஒரு தகவலாக, கோச்சடையான் படத்துக்கு இன்னும் பின்னணி இசை சேர்ப்பு பணியே நடைபெறவில்லை. டம்மியான சவுண்ட் ட்ராக்கை வைத்து சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டனர் என்ற செய்தியும் வெளியானது.
கோச்சடையான் படம் பற்றி வெளியான செய்திகளே தற்போது அந்தப் படத்துக்கு எதிராகத் திரும்பி இருக்கிறது. சென்சார் செய்யப்பட்ட பிறகு ஒரு படத்தில் எந்த மாற்றங்களும் செய்யக்கூடாது என்பது விதி. இந்த விதியை மீறி கோச்சடையான் படத்தின் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன என்பதை காரணம் காட்டி தணிக்கைக்குழுவுக்கு புகார் வந்திருக்கிறதாம்.
அதன் அடிப்படையில் கோச்சடையான் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும்படி சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். இது உண்மையா என சென்சார்போர்டு வட்டாரத்தில் விசாரித்தால், கோச்சடையான் 2டி படத்துக்குத்தான் சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை 3டியிலும் வெளியிடுகிறார்கள். எனவே 3டி வெர்ஷனை எங்களுக்குக் காட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.