ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இப்போதெல்லாம் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்து யாருடைய படத்தில் நடிப்பது என்கிற விசயத்தில் ரொம்பவே தடுமாறிப்போகிறார்கள் பிரபல ஹீரோக்கள். அந்த வகையில், ஐ படத்தை முடித்த விக்ரமிடம் பல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள் என்றாலும், யார் படத்தில் முதலில் நடிப்பது என்பதை இன்னமும் அவர் முடிவெடுக்கவில்லையாம்.
அதேபோல்தான் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய்யும், அடுத்த படம் குறித்து இன்னும முடிவெடுக்காமல் இருக்கிறாராம். விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக டைரக்டர்கள் சமுத்திரகனி, அட்லி இருவருமே வெளிப்படையாக கூறி வருகின்றனர். ஆனபோதும், அதுகுறித்து விஜய் தரப்பில் இருந்து எந்தவித ரெஸ்பான்சும் வரவில்லையாம்.
ஆனால் இதுபற்றி விஜய் வட்டாரத்தை விசாரித்தால், அடுத்து விஜய்யை இயக்க பல டைரக்டர்கள் கதை சொல்லியிருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு அந்த கதைகள் பிடித்திருந்தாலும் அப்படங்களில் உடனடியாக நடிக்கும் முடிவில் இல்லை. அவர் மனதில் வேறு சில இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படத்தில்தான் அடுத்து பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனால் கத்தி முடிந்த பிறகுதான் அதுபற்றிய பேச்சுவார்த்தையை விஜய் தொடங்குவார் என்கிறார்கள்.