ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விக்ரமும், இயக்குநர் தரணியும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். இருவரும் லயோலா காலேஜில் படித்தவர்கள். அந்த அடிப்படையில்தான் தரணி இயக்கத்தில் ஏற்கனவே தில், தூள் படங்களில் தரணி இயக்கத்தில் நடித்தார் விக்ரம். இவ்விரு படங்களின் வெற்றிக்குப் பிறகு தமிழில் முன்னணி கமர்ஷியல் டைரக்டராக உருவெடுத்தார் தரணி. ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய குருவி, ஒஸ்தி படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே பல வருடங்களாக படவாய்ப்பில்லாமல் இருக்கிறார்.
தரணியின் நிலையைக் கேள்விப்பட்ட விக்ரம் அவரை அழைத்து, அவரது இயக்கத்தில் நடிக்க ரெடியாக இருப்பதாகச் சொல்லி தனக்கான கதையை தயார் பண்ணவும் சொல்லி இருக்கிறார். விக்ரம் சொன்னபடி சில மாதங்களிலேயே படு கமர்ஷியலான ஆக்ஷன் சப்ஜெக்ட்டை தயார் செய்துவிட்டார் தரணி. அடுத்தகட்டமாக, தன்னிடம் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் தயாரிப்பாளர்களிடம் தரணியை அனுப்பி வைத்தார் விக்ரம். விக்ரம் சிபாரிசு செய்தும் பல தயாரிப்பாளர்கள் தரணியை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. காரணம் அவர் கேட்ட சம்பளம்தான்!
5.5 கோடி சம்பளம் கேட்கிறாராம் தரணி. தொடர்ந்து ப்ளாப் படங்களைக் கொடுத்து வரும் டைரக்டர், சொன்ன பட்ஜெட்டைவிட பல மடங்கு செலவை இழுத்துவிட்டு நஷ்டம் உண்டாக்குகிறவர் என்றெல்லாம் தரணி மீது கெட்ட பெயர் உள்ளது. திரையுலகில் தன்னைப் பற்றி இப்படி எல்லாம் கருத்துக்கள் இருக்க, தரணியோ ஐந்தரை கோடி சம்பளம் கேட்டு படம் கொடுக்க வந்த தயாரிப்பாளர்களையும் விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார்.