ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ரோஜா தமிழ்நாட்டில் வசித்தாலும், ஆந்திராவில்தான் அரசியல் செய்கிறார். ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த அவர் அந்த கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்தார். அந்தக் கட்சியின் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அதன் பிறகு ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் சேர்ந்தார். இப்போது அந்தக் கட்சியின் சார்பில் நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் இணைந்தே நடக்கிறது.
தான் போட்டியிடுவது பற்றி ரோஜா கூறியிருப்பதாவது: இந்த முறை நான் வெற்றி பெறுவது உறுதி. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாட்டுக்கு தேவையான நல்ல திட்டங்களை வைத்திருக்கிறார். அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வர எனக்கு வாக்களியுங்கள் என்ற பிரச்சாரம் செய்து வருகிறேன். மற்ற கட்சிகள் பற்றியோ, தலைவர்கள் பற்றியோ நான் தாக்கி பிரச்சாரம் செய்யவில்லை. தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆந்திர அரசியலே எனக்குப்போதும். என்கிறார் ரோஜா.