ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். நிமிர்ந்து நில் படத்தின் மூலம் சினிமா நடிகராகிவிட்டார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிமிர்ந்து நில் படத்திற்கும், அதில் நடித்த எனக்கும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருவது சந்தோசமாக இருக்கிறது. இயக்குனர் சமுத்திரகனி இரண்டு மாதங்கள் எனக்கு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார். சின்னத்திரையில் நான் இயல்பாக செய்து வரும் வேலை என்பதால் எளிதாக நடிக்க முடிந்தது. நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன். நான் நானாக நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் பிசியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சின்னத்திரையை விட மாட்டேன் என்கிறர் கோபிநாத்.