ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டில்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்மபூஷன் விருது பெற்ற கமலஹாசன் அளித்துள்ள நெகிழ்ச்சி பேட்டியில், இந்த விருது என் மண்ணை பெருமைப்படுத்தும் விருது என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் விருதை வாங்கிய ஜனாதிபதி மாளிகையும், விருது பெற வந்திருந்தவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு இன்னும் பணிவை கற்றுத் தந்திருக்கிறது. இந்த விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல, என் மண்ணையும் பெருமைப்படுத்துகிறது. ஒரு இந்திய குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதியேற்க வைக்கும் விருதாக இதனை பார்க்கிறேன்.
நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதை இந்த விருது உணர வைக்கிறது. ஜனாதிபதி மாளிகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது முன்னை விட ஏனோ நெகிழ்ச்சியாக இருந்தது. தேசப் பற்று மிக்க என் தாய் தந்தையின் நினைவுகள் வந்தது. சிலர் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்தால்தான் புல்லரித்துப்போவார்கள். நான் இந்த தேசத்தின் எல்லா துறையின் வெற்றியையும் கண்டு பூரிப்படைவேன். இந்த விருக்கு என்னை தகுதியுள்ளவனாக்கிக் கொள்ள இன்னும் நான் நிறைய உழைக்க வேண்டியது இருக்கிறது.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.