ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துப்பாக்கி படத்தையடுத்து, விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஆரம்பத்தில் தீரன் என்ற பெயர் வைப்பதாக இருந்தனர். ஆனால், பின்னர் கதைக்கு பொருத்தமாக இருக்காது என்று மாற்று தலைப்பினை யோசித்துக்கொண்டிருந்தார் முருகதாஸ்.
அப்படி பலத்த யோசனைக்குப்பிறகு இப்போது கத்தி என்று பெயர் வைத்திருக்கிறாராம். துப்பாக்கி போன்று குறி வைத்து தாக்குபவன் என்பதற்கு அடையாளமாக துப்பாக்கி என்ற முந்தைய படத்திற்கு டைட்டீல் வைத்த முருகதாஸ், இந்த படத்தில் விஜய் ஷார்ப்பானவராக நடிப்பதால், கத்தி என்ற தலைப்பை வைத்திருக்கிறாராம். இது விஜய் உள்பட அனைவருக்குமே பிடித்திருப்பதால், விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
மேலும், இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் விஜய், வாலியில் அஜீத் நடித்தது போன்று நல்லவன், கெட்டவன் என்ற இருதுருவங்களாக நடிக்கிறாராம். அதில் கெட்டவன் கோல்கட்டாவைச்சேர்ந்த ரவுடியாம். அதனால்தான் முதல்கட்ட படப்பிடிப்பை கோல்கட்டாவில் நடத்தியிருக்கிறார் முருகதாஸ். தற்போது கெட்டவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்து விட்டதால், அடுத்து சிவானந்தம் என்ற நல்லவராக தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய்.