ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்த படம் நிமிர்ந்து நில். லஞ்சத்தை மையமாகக்கொண்டு ஷங்கர் இயக்கிய இந்தியன், அந்நியன் பட வரிசையில் இப்படத்தையும் லஞ்சத்தை மையமாகக்கொண்டு இயக்கியிருக்கிறார் சமுத்திரகனி.
இப்படம் பல ஊர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், சில தியேட்டர்களுக்கு சென்று நேரடியாக ரசிகர்களை சந்திதது வருகிறார் சமுத்திரகனி. மேலும், தனது படங்களின் வெற்றிக்கு பிறகு காங்கேயன் சிவன்மைலைக்கு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சமுத்திரகனி, இந்த முறையும் அந்த கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
அதையடுத்து, தான் இயக்கும் புதிய பட வேலைகளிலும் விரைவில் இறங்க திட்டமிட்டுள்ள அவர், ஏப்ரல் 14-ந்தேதி நிமிர்ந்து நில் படத்தை தெலுங்கில் வெளியிடுகிறாராம். அதையடுத்து, அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபடப்போகிறாராம். இந்தியைப்பொறுத்தவரை முன்னணி நடிகர்தான் வேண்டும் என்றில்லாமல், எந்த நடிகர் கால்சீட் தர முன்வந்தாலும் அவர்களை வைத்து இயக்குவாராம் சமுத்திரகனி.