அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருந்த கிரிஷ், சினிமாவில் நடிக்கத்தான் சென்னைக்கு வந்தார். டில்லி பாபு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. அதற்கு பிறகு நடிப்பு சான்ஸ் கிடைக்காமல் பாடகராகிவிட்டார். ஆனாலும் அவரது நடிப்பு தாகம் தீரவில்லை. நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டு அப்பாவான பிறகு அவரது ஹீரோ கனவு நிறைவேறியிருக்கிறது.
தற்போது புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிருஷ்டி டாங்கே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்கிறார். செய்யது இப்ராஹிம் டைரக்ட் செய்கிறார். ரஹைனா இசை அமைக்கிறார். குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
"மதுரை என்றாலே வன்முறை பூமியாகத்தான் சினிமாவில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை மென்மையான காதல்களும் பூக்கிற பூமி என்று காட்டும் படம் இது. முதல் காதலின் தயக்கம், யதார்த்தம், தோல்வி தான் திரைக்கதை. காமம் வேறு காதல் வேறு என்ற கருத்தை வலியுறுத்தியும் காமத்தின் தொடக்கம்தான் காதல் என்ற கருத்தை உடைத்தும் மெசேஜ் சொல்கிறேன்" என்கிறார் டைரக்டர் செய்யது இப்பராஹிம்.