ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டதில் டி.ஆர் குடும்பமே கவலையில் இருக்கிறது. காரணம் ஹன்சிகாவை அவர்கள் குடும்பத்திற்கு பிடித்திருந்ததுதான். சிம்பு, ஹன்சிகா திருமணத்துக்காகத்தான் மகள் திருமணத்தை வேகமாக நடித்தினார் டி.ஆர். சிம்பு ஹன்சிகா பிரிவு குறித்து அவர்கள் யாரும் கருத்து சொல்ல வில்லை. முதன் முறையாக சிம்பு தம்பி குறளரசன் கருத்து சொல்லியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: அண்ணனை பற்றிய காதல் கிசுகிசுக்கள் வரும்போது காமெடியாக எடுத்துக்குவேன். இந்த காதுல வாங்கி அந்தக் காதுல விட்டுருவேன். ஆனால் அண்ணன், ஹன்சிகா காதல் பிரேக் ஆனப்போ ரொம்ப பீல் பண்ணினேன். காரணம் அவுங்க காதல் எவ்வளவு உண்மையாக இருந்தது என்று எனக்குத் தெரியும். இன்னைக்கு அது இல்லேங்றப்போ ரொம்ப வருத்தமா இருக்கு. இருவரும் ஒண்ணா இல்லைங்றத நினைச்சே பார்க்க முடியல. அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுவார்னு நினைச்சாலே ரொம்ப கவலையா இருக்கு.
இவ்வாறு குறளரசன் கூறியிருக்கிறார்.