ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிங்கம்-2 படத்திற்கு பிறகு எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பது என்பது சூர்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது. அதற்கு முன்பே 3 இயக்குனர்களிடம் கதை கேட்டிருநதார். அதில் கெளதம்மேனன், லிங்குசாமி இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள. இதில் கெளதம்மேனன் படத்தில் முதலில் நடிக்க தயாரானபோது, அவர் சொன்ன கதையில் சூர்யாவுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஏற்கனவே மாற்றான் தோல்வியில் இருந்தவர், மீண்டும் அந்த தோல்வி தன்னை தொடர்ந்து விடக்கூடாது என்பதற்காக, அடுத்து லிங்குசாமி சொன்ன கதையில் நடிக்க முடிவெடுத்தார். இதனால், கெளதம்மேனனுக்கும், சூர்யாவுக்கும் இடையிலான நட்பில் கீறல் விழுந்தது. என்றாலும், கேரியர் முக்கியமாச்சே என்று லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் தற்போது வித்தியாசமான கெட்டப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா.
இதற்கிடையே அடுத்தடுத்து அவரை சந்தித்து சில பிரபல டைரக்டர்கள் கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால், அப்படி அவர் கேட்ட கதைகளில் ஒன்றுகூட தேறவில்லையாம். அதனால், எவ்வளவு வித்தியாசமான கதையாக இருந்தாலும் அதற்கேற்ப முழுசாக என்னை மாற்றிக்கொண்டு என் உழைப்பை நூறு சதகிவிதம் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நல்ல தரமான கதைகள் கிடைக்கவில்லையே என்று கூறிவரும் சூர்யா, மேலும் பல இயக்குனர்களிடம் கதை கேட்கும் படலத்தை முடுக்கி விட்டுள்ளார்.