சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சின்னத்திரையின் தெனாவெட்டான நடிகை தேவிபிரியா. பரபரப்பு செய்திகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். தற்போது ரோமாபுரிப் பாண்டியன் தொடரில் அரசவைப்புலவரின் மகளாகவும், தளபதியின் காதலியாகவும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சேலை கட்டி நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வண்ண வண்ண உடைகள், உடல் முழுக்க நகைகள் அணிந்து நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நிஜத்தில்தான் மன்னர் குடும்பத்தில் பிறக்க வில்லை அப்படி நடிக்கவாவது வாய்ப்பு கிடைக்கிறதே என்ற சந்தோஷம்தான் அது. தொடரில் எனக்கு மிக முக்கியமான கேரக்டர்.
பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் தொடர்ந்து பகை. இருநாட்டின் உறவுக்காக இந்திர விழா நடக்கிறது. அந்த விழாவில் பாண்டிய நாட்டு தளபதி செழியன் கடத்தப்படுகிறார். இதனால் முன்னை விட பகை அதிகமாகி விடுமோ என்கிற பதட்டம் நிலவுகிறது. சோழ நாட்டு அரசவை புலவன் காரிகண்ணனாரின் மகளான நான் ஆண் வேடமணிந்து செழியனை மீட்கச் செல்கிறேன். செழியனை மீட்டு இரு நாட்டு பகையை எப்படி போக்குகிறேன் என்பது என் பகுதி கதை. அதில் செழியனோடு காதலும் கொண்டு விடுகிறேன். நான் நடிக்கும் இந்தப் பகுதி பரபரப்பாக போகும். என்கிறார் தேவிபிரியா.