ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரவுடி ரத்தோர், ராமைய்யா வாஸ்தவய்யா படங்களைத் தொடர்ந்து பிரபுதேவா இந்தியில் இயக்கியுள்ள படம் ஆர்.ராஜ்குமார். ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடித்த இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு ஆஸ்கர் திரைப்பட நூலகத்திலும் இடம்பிடித்திருக்கிறது. உலக அளவில் வெளியாகும் சிறந்த படங்களை மட்டும் சேகரித்து வைக்கும் இந்த நூலகத்தில் தனது படமும் இடம் பிடித்திருப்பதால் அளவில்லா சந்தோசத்தில் இருக்கிறார் பிரபுதேவா.
இதுபற்றி அவர் கூறியுள்ள செய்தியில், இந்த ஆர்.ராஜ்குமார் படத்தை நான் தெலுங்கில் இருந்து இந்திக்கு ரீமேக் செய்தாலும், தெலுங்கிலும் நானே இயக்கியிருந்தேன். அந்த வகையில் எனது சொந்த கதையில் அப்படத்தை இயக்கினேன். அதோடு, படத்தில் நடித்திருந்த ஷாகித் கபூர், சோனாக்ஷி இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இப்படியொரு தகுதி கிடைத்திருப்பது என்றால் அவர்களும் ஒரு காரணம்தான்.
மேலும், இந்த ஆஸ்கர் நூலகத்தில் இதற்கு முன்பு, தேவ்தாஸ், டாம் 999 உள்பட 5 இந்திய படங்கள் இடம்பிடித்துள்ளது.அந்த வகையில், எனது படம் 6வது இந்திய படமாக இடம்பிடித்திருப்பது எனக்கு சந்தோசமாக உள்ளது. அதோடு, இன்னும் இதுபோன்ற நிறைய தரமான படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வமும் இப்போது ஏற்பட்டுள்ளது என்கிறார் பிரபுதேவா.