ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
9ம் வகுபபு படித்தபோதே ஒரு மலையாள படத்தில் அறிமுகமானவர் லட்சுமிமேனன். அதையடுத்து பிரபுசாலமன் இயக்கிய கும்கி படத்தில் தமிழுக்கு வந்தவர், சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து பிசியாகி விட்டார். ஆனபோதும், படிப்பை முதலிடத்தில் வைத்து விட்டு, சினிமாவை இரண்டாம் பட்சமாகத்தான் வைத்திருக்கிறார் லட்சுமிமேனன். எத்தனை படங்களில் நடித்தாலும் படிப்பை மட்டுமே விடவே மாட்டேன் என்று வைராக்கியத்துடன் படித்து வந்தவர் தற்போது ப்ளஸ்-ஒன் இறுதி ஆண்டு தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். அதற்காக தான் நடித்து வந்த படங்களை அவசரமாக முடித்துக்கொடுத்து விட்டு, கேரளா, எர்ணாகுளத்தில் முகாமிட்டுள்ளார். அதன்காரணமாக, நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ஜிகர்தண்டா படத்தின் ஆடியோ விழாவுக்கு வரவில்லை லட்சுமிமேனன். ஆனால், நேற்று சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்திருந்தார்.
அப்போது, அவர் பேசுகையில், எனக்கு தேர்வு இருந்ததினால்தான் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்த லட்சுமிமேனன். இன்று ஒருநாள் கேப் கிடைத்ததால், வந்திருக்கிறேன். ஆனால் என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. நிறைய படிக்க வேண்டியதிருக்கிறது என்று சொன்னவர், இந்த படத்தில் எனக்கு வேலை கம்மிதான். ஆனால், அழகான வேடம். இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டர் என்பதால், இந்த படத்தில் புதுமையான லட்சுமிமேனனை பார்க்கலாம் என்றார்.
மேலும், என்னதான் சினிமாவில் நான் பிசியாகிக்கொண்டேயிருந்தாலும், படிப்பை விட மாட்டேன். முதலில் படிப்பு. அதற்கு அப்புறம்தான் நடிப்பு. அதனால்தான் படிப்பை என்னை அழைத்துக்கொண்டேயிருக்கிறது என்று சொன்ன லட்சுமிமேனன். பிரஸ்மீட் நடந்து கொண்டிருக்கும்போதே, அரங்கத்திலிருந்து வெளியேறி கேரளாவுக்கு பறந்து விட்டார்.