ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட மோதலால், கன்னட நடிகை விந்தியா, தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். இதில், அவர், "கோமா நிலையை அடைந்துள்ளார். "மனத மரயல்லி என்ற, கன்னட திரைப்படத்தில் நடித்தவர், நடிகை விந்தியா. கர்நாடகாவின், ஷிமோகா நகரைச் சேர்ந்த இவர், பெற்றோருடன், பெங்களூருவில் வசித்து வந்தார். இவர், மஞ்சுநாத் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. விந்தியா, சினிமாவில் நடிக்க வந்த பின், இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டது. மஞ்சுநாத்தை மறந்து, ரவி என்பவருடன், நடிகை விந்தியா, நட்புடன் பழகி வந்துள்ளார். இதை அறிந்த மஞ்சுநாத், விந்தியாவை மிரட்டியுள்ளார்.
"நீ என்னை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல், உனக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பேன் என, மிரட்டியுள்ளார். இதனால், விந்தியா, நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அதிக அளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதையறிந்த உறவினர்கள், மருத்துவ மனையில் சேர்த்தனர். நேற்று நள்ளிரவு வரை, அவருக்கு நினைவு திரும்பவில்லை. அவர், கோமா நிலையில் உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விந்தியாவின் தாய், நாதம்மா கூறுகையில், "மஞ்சுநாத், என் மகளின் வாழ்க்கையை நாசம் செய்து விட்டான். அவளை, சிம்லாவுக்கு அழைத்துச் சென்று மானபங்கம் செய்து விட்டான். இதனால், என் மகள், பித்து பிடித்தவள் போன்று இருந்தாள், என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -