ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவுரவம் படத்தில் அறிமுகமான யாமி கவுதமிற்கு அதன் பிறகு தமிழில், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. கவுதம் மேனின் போட்டோன் கதான் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரபுதேவாவின் உதவியாளர் பிரேம் சாய் இயக்கினார். ஜெய், சந்தானம், வி.டி.வி.கணேஷ் நடித்திருந்தனர். படம் ரெடியாகியும் இயக்குனர் கவுதம்மேனனின் பொருளாதார நெருக்கடி காரணமாக படம் ரிலீசாகவில்லை.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே யாமியை, பிரபுதேவா இந்திப் படத்திற்கு அழைத்துச் சென்று விட்டார். விக்கிடோனர் படத்தில் நடித்த யாமி. இப்போது முழு நேர இந்தி நடிகையாகிவிட்டார். அஜய்தேவ்கானுடன் ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் நடித்து வருகிறார். அலி ஜாபர் ஜோடியாக டோட்டல் சீயாப்பா படத்தில் நடிக்கிறார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டீர்களா என்றால் கண்டிப்பாக வருவேன். என்கிறார்.
அவர் மேலும் கூறியதாவது: "தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இந்தப் படம் உரிய நேரத்துல வந்திருந்தா தமிழ்ல முக்கியமான இடத்துல இருந்திருப்பேன். அதற்கு பிறகும் நிறைய தமிழ் வாய்ப்புகள் வந்தாலும் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் ரிலீசான பிறகுதான் அடுத்த படத்தில் நடிக்கிதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். இப்போ இந்தி மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி படங்கள்லேயும் நடிச்சிட்டிருக்கேன்" என்கிறார் யாமி.