ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரேணிகுண்டா படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் சஞ்சனாசிங். அதையடுத்து கோ, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல், ரகளபுரம் என சுமார் 20 படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள், செகண்ட் ஹீரோயினி என நடித்து விட்ட இவர், அடுத்து முதன்மை ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். அவர் அளித்த அதிரடி பேட்டி இதோ...
* கதாநாயகிக்குரிய அனைத்து தகுதிகளும் இருந்தும் சிறிய வேடங்கள மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தது ஏன்?
சினிமாவில் நான் என்ட்ரி ஆகும்போது, எனக்கு சினிமாவைப்பற்றி எதுவும் தெரியாது. அதோடு என்னை வழி நடத்த சரியான நபர் இல்லை. அதனால், தட்டுத்தடுமாறி, நிறைய கஷ்டப்பட்டுத்தான் மூன்று ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்திருக்கிறேன். அப்போது எனக்கு கிடைத்த படங்களில் சிறிய வேடங்களாக இருந்தபோதும் அதில் எனது திறமையை வெளிப்படுத்தி வந்தேன். அப்படி என் திறமை மீது நம்பிக்கை ஏற்பட்டு சில இயக்குனர்கள் வித்தியாசமான வேடங்களுக்கு என்னை அழைத்தனர். அதையடுத்து அப்படி சிறிய வேடங்கள் கொடுத்தவர்களுக்கு என் திறமை மீது நம்பிக்கை ஏற்பட்டு, அடுத்து அவர்கள் இயக்கும் படங்களுக்கு என்னை கதாநாயகியாக்க உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள்.
* ரேணிகுண்டா படத்திற்கு பிறகு சிறிது இடைவெளி கொடுத்தது ஏன்?
அதற்கு காரணம் அந்த படத்தில் எனது ரோலை பார்த்து விட்டு, அடுத்தடுத்து அதே மாதிரியான வேடங்களில் நடிக்கவே என்னை அழைத்தனர். அதனால்தான் சிறிய கேப் கொடுத்தேன். என்னைப்பொறுத்தவரை படத்துக்குப்படம் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறது. அதனால், செலக்டீவாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.
* இது கவர்சசி காலமாயிற்றே, கவர்ச்சியில் உங்கள் எல்லை எதுவரை?
கதைக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதற்காக, ஆபாசமாக நடிக்க மாட்டேன். இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் என்னை முகம் சுழிக்காமல் கண்டுகளிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. மேலும், கிளாமர், ஹோம்லி என இரண்டுவிதமான வேடங்களிலும் நடிக்கவே விரும்புகிறேன்.
* ஆரம்பத்தில் ஒல்லிக்குச்சியாக இருந்த நீங்கள், இப்போது வெயிட் போட்டிருப்பதேன்?
கதாநாயகிகள் கொடியிடையாகதான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உடம்பை அப்படி ஸ்லிம்மாக பராமரித்து வைத்திருந்தேன். ஆனால், தமிழ் நாட்டு ரசிகர்கள் குண்டாக இருக்கும் நடிகைகளைதான் ரசிப்பார்கள் என்ற கதை பின்னர்தான் எனக்கு தெரிந்தது. அதனால்தான் இப்போது ரசிகர்களின் ரசணைக்கு தீனி போடும் வகையில் வெயிட் போட்டிருக்கிறேன்.
* இப்போதெல்லாம் ஹீரோயினி சான்ஸ் வேண்டுமென்றால் ஹீரோக்களுடன் டேட்டிங் செல்ல வேண்டும் என்கிறார்கள்?
சினிமாவில் திறமையை முன் வைத்து ஜெயிக்கத்தான் ஆசைப்படுகிறேன். எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன. அதைப்பார்த்துதான் இப்போது மீரா ஜாஸ்மின் நடிக்கும் விஞ்ஞானி படத்தில் என்னை நம்பி சேலஞ்சிங்கான வேடம் தந்திருக்கிறார்கள். அதேபோல் ஆர்யா நடிக்கும் மீகாமன், ஜெயம்ரவி நடிக்கும் புதிய படம் ஆகியவற்றில் எனது கேரக்டர் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதிதாக இருக்கும். ஆக, என் திறமைக்கேற்ற வாய்ப்புகள் இப்போது கிடைத்து வருகிறது. அதனால், ஹீரோயினி சான்ஸ் வேண்டும் என்பதற்காக ஹீரோக்களுடன் டேட்டிங் செல்லும் ஐடியா எனக்கில்லை.
* ஆர்யாவுடன் நடிப்பது ரொம்ப ரிஸ்க் என்கிறார்களே?
அப்படியெல்லாம் இல்லை. நான் பார்த்தது வரை ஆர்யா ரொம்ப நல்ல நடிகர். எதையும் வெளிப்படையாக பேசுவார். நல்ல ப்ரண்ட்லியாக பழகுவார். அதனால் அவர் ரிஸ்க்கான நடிகர் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியாது. மேலும், உடன் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய நடிகர் அவர்.
* இப்போதெல்லாம் ஹீரோயினிகளே அயிட்டம் பாடல்களுக்கு ஆடுகிறார்களே. நீங்கள் எப்படி?
சினிமாவில் முன்னணி நாயகியாக வேண்டும் என்பதுதான் எனது எண்ணமே. அதற்காகத்தான் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறேன். எனது போராட்டத்துக்கு பலனாக இப்போதுதான், ஜெயம்ரவி, ஆர்யா என முன்னணி ஹீரோக்களின் படங்களில் வெயிட்டான வேடங்களில் நடிக்க ஓ.கே ஆகியிருக்கிறேன். அதனால் அடுத்தபடியாக ஹீரோயினாக ப்ரமோஷன் ஆக வேண்டும் என்பதற்காக சில டைரக்டர்களிடம் கதையும் கேட்டு வருகிறேன். அதனால் இந்த நேரத்தில் அயிட்டம் பாடல்களில் ஆட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ஏற்க மாட்டேன். அதேசமயம், ஒரு பத்து படங்களில் கதாநாயகியாக நடித்த பிறகு ஹீரோ வித்தியாசம் பார்க்காமல் அயிட்டம் பாடல்களுக்கு நடனமாடுவேன்.
* சமீபத்தில் புலியுடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டீர்களாமே?
புலி மட்டுமின்றி அனைத்து விலங்குகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு எந்த விலங்குகள் மீது பயம் கிடையாது. பாசம்தான் அதிகமாக உள்ளது. அதேபோல் விலங்குகளுக்கும் என் மீது பாசம் அதிகம். அதனால்தான் மற்றவர்களெல்லாம் நெருங்க பயப்படும் புலியிடம் நான் நெருங்கி நின்றால் அவை என்னை எதுவும் செய்வதில்லை. மாறாக, என்னை பாசத்தோடு பார்க்கின்றன.
* தற்போதைய டைரக்டர்கள் கதாநாயகிகளுக்கு தமிழ் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே?
மும்பை பெண்ணான எனக்கு தமிழில் பேச ஒரு வார்த்தைகூட தெரியாமல்தான் இருந்தது. ஆனால், 3 வருடமாக சென்னைவாசியாகி விட்டதால், இப்போது ஓரளவு பேசுவேன். மற்றவர்கள் என்ன பேசினாலும் என்னால் புரிந்து கொள்ள முடியும். அதனால், என்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம் தமிழிலேயே கதை கேட்கிறேன். இன்னும் ஓரிரு வருடத்தில் எனக்கு நானே தமிழில் டப்பிங் பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
* சினிமாவில் எந்த மாதிரியான நடிகையாக நிலைத்து நிற்க விருப்பம்?
சினிமாவில் நடிக்க வரும்போது ஒரு நடிகையாக வேண்டும் என்பது மட்டுமே எனது ஆசையாக இருந்தது. ஆனால் இப்போது சினிமா பற்றி புரிந்து விட்டதோடு, எனது ஹைட் வெயிட்டுக்கு ஆக்ஷன் கதைகள் மிக பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்டேன். அதனால் எதிர்காலத்தில் ஆக்சன் கதைகளில் நடித்து சிறந்த ஆக்சன் கதாநாயகியாகவும் சினிமாவில் புகழ் பெற வேண்டும் என்பதே எனது எதிர்கால ஆசையாக உள்ளது என்கிறார் சஞ்சனாசிங்.